• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் ஜூன் 2 முதல் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்

May 28, 2022 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர ரயில், ஜூன் 2ம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலானது, ஜூன் 2ம் தேதி முதல் சங்கரன் கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘‘திருநெல்வேலி,சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம்,கீழகடையம்,பாவூர் சத்திரம், தென்காசி,ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை நிலையங்களில் நின்று சென்ற மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர ரயிலானது, ஜூன் 2ம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க