• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையம் அருகே இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூட்டில் சிக்கியது

June 13, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மலை அடிவாரப்பகுதிகளில் நுழைந்து ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு நாய்களை சிறுத்தை ஒன்று வேட்டையாடி வந்தது. சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் விசாய நிலங்களுக்கு செல்லவே அச்சமடைந்தனர். இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், கடந்த மாதம் வனத்துறை சார்பில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கபட்டு வந்த நிலையில், சிறுத்தை இருப்பது உறுதி செய்யபட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், சிறுமுகை வனத்துறையினர் சத்தியமங்கலத்தில் இருந்து கூண்டு கொண்டு வரப்பட்டு சென்னாமலை அடிவாரத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுமுகை வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் பிடிபட்ட சிறுத்தையை பத்திரமாக மீட்டு டெம்போ வாகனத்தில் ஏற்றி சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பல மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க