• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

December 22, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வட்டார அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி காரமடை, பெ.நா.பாளையம் வட்டார இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையம் , சிறுமுகை சாலையிலுள்ள நஞ்சையா பாலிடெக்னிக் கல்லூரியில் டிசம்பர் 23 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில் ஐடி, இன்டஸ்ட்ரிஸ், ஆட்டோ மொபைல், கார்மென்ட்ஸ், கட்டுமானம், விற்பனைத் துறை உள்பட பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே 8 ஆவது முதல் முதுகலைப் படிப்பு பயின்றவர்கள் வரை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தனியார் வேலை வாய்ப்பு முகாம் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இளைஞர்கள் தங்கள் கல்வி சான்றிதழ், ஆதார் உள்பட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க