• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழப்பு

April 5, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நாடார் காலனியில் செல்வமுத்து மாரியம்மன்உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 3ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இங்கு நடந்த பூஜைக்கு பின்னர்  பக்தர்களுக்கு அவல் சர்க்கரை,நெய் கலந்த பிரசாதம் கொடுத்தனர்.அப்போது,பிரசாதம் சாப்பிட 30 பேர் வாந்தி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த சாவித்திரி 60 மற்றும் லோகநாயகி 65 ஆகியோர் மரணமடைந்தனர்.

இதையடுத்து,இடத்திற்கு தாசில்தார் ரெங்கராஜன் இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் இன்று சம்பவ சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்போது, தீபம் ஏற்றுவதற்கான நெய் மூலம் பிரசாதம் செய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க