• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையத்தில் இளைஞரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு

December 10, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் நடூரில் லட்சுமணன் என்ற இளைஞரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த பகுதியில் இன்னமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த சிவலட்சுமணன் என்ற இளைஞருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிவலட்சுமணனை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் காயமடைந்த இளைஞர் லட்சுமணனுடன் மூத்த வழகறிஞர் ரத்தினம், தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழகறிஞர் ரத்தினம்,

மேட்டுப்பாளையம் நடூரில் லட்சுமணன் என்ற இளைஞரை காவல் துறையினர் அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர் எனவும் ,காவல் துறையினர் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
17 பேர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை இன்னும் சேர்க்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், நடூரில் இளைஞர் சிவலட்சுமணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நடூர் பகுதியை இளைஞர் சிவலட்சுமணன்,

மரியாதை குறைவாக பேசிய காவல் துறையினரை மரியாதையாக பேசுங்க என்று சொன்னதற்காக காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தாக்கினர் என குற்றம்சாட்டினார்.குச்சியை வைத்து தாக்கியதில் கை விரல்களில் காயம் ஏற்பட்டு அசைக்க முடியவில்லை என கூறிய அவர்,காவல் துறை மனசாட்சியே இல்லாமல் தன்னை தாக்கினார்கள் எனவும் ,உடையை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக நிற்க வைத்து போலீசார் தன்னை தாக்கினர் எனவும் தெரிவித்தார். சூ கால்களினால் எட்டி உதைத்து போலீசார் துன்புறுத்தினார்கள் எனவும் பின்னர் நள்ளிரவில் விடுவித்து விட்டனர் எனவும் சிவலட்சுமணன் தெரிவித்தார்.

மேலும் படிக்க