• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்

September 26, 2021 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மேட்டுப்பாளையம் இந்து முன்னணி மேற்கு நகர செயலாளர் சந்திரசேகர் (35) இவர் நரிபள்ளம் அடுத்த டிஏஎஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின் தொடர்ந்து பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் இரும்பு கம்பியால் சந்திரசேகரை தாக்கினர். இதில் தடுமாறி விழுந்த சந்திரசேகருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோவை போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் விசாரணை நடத்தினார்.சந்திரசேகரை தாக்கியது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் படிக்க