• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் தரை மட்டம் – 17 பேர் பலி

December 2, 2019 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் தனியார் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் தரை மட்டம் 17 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிகக கூடும் என அஞ்சப்படுகிறது.

மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியிலுள்ள கண்ணப்ப நகரில் தனியாருக்கு சொந்தமான 20 அடி காம்பவுண்ட் சுவர் உள்ளது. நேற்று பெய்த மழையின் காரணமாக , சுவற்றின் உள்பகுதியில் நீர் தேங்கியதால் 20 அடி உயரமுள்ள சுவர் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. அப்போது சுவற்றை ஒட்டி இருந்த 3 ஓட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததுள்ளது. 3 வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே மண்ணோடு புதைந்து போனார்கள்.இதில் 3 வீடுகளில் 18 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என கருதி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து, இரண்டு குழந்தைகள், 12 பெண்கள், 5 ஆண்கள் உள்ளிட்ட 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.3 வீடுகளில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இறந்தவர்களின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் எடுக்கப்படும்போது, அருகிலிருப்பவர்கள் சொல்லித்தான் பெயர்கள் தெரிவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும். மேலும் மீட்பு பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் தாமதமாக வந்த தகவலையடுத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் 17 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க