• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேகாலயா ஆளுநர் சண்முகநாதனின் ராஜினாமா கடிதம் ஏற்பு

January 27, 2017 தண்டோரா குழு

மேகாலயா ஆளுநர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்து சண்முகநாதன் வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேகாலயா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மேகாலயா ஆளுநர் மாளிகையில் நேர்முகத் தேர்வுக்கு வந்த இளம்பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகச் சர்ச்சை கிளம்பியது.

இதனை அடுத்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி அலுவலகங்களுக்கு முன்னாள் மேகலாயா ஆளுநர் சண்முகநாதன் மீது ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அடுக்கடுக்கான புகார்களை அனுப்பி வைத்தனர்.

இந்த புகார்களைத் தொடர்ந்து வியாழக்கிழமை சண்முகநாதன் தனது ராஜிநாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜிநாமாவைக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டார்.

மேலும் மேகாலயா ஆளுநர் பொறுப்பை அசாம் ஆளுநர் பன்வாரிலால் கூடுதலாகக் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க