• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரெஞ்ச் பிரைஸில் செத்த பல்லி

March 3, 2017 தண்டோரா குழு

கொல்கத்தாவில் உள்ள மெக்டோனால்ட்ஸ் உணவகத்தில் பிரெஞ்ச் பிரைஸில் பொறிக்கப்பட்ட நிலையில் பல்லி ஒன்றும் சேர்ந்து பரிமாறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா மோயித்ரா எனும் கர்ப்பிணி தமது மகளுடன் மெக் டோனால்ட்ஸ் உணவகம் சென்றுள்ளார். அங்கு தனது குழந்தைக்கு பிரெஞ்ச் பிரைஸ் வாங்கிக் கொடுத்தார். அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை, அதனுள், நன்கு ‘ஃப்ரை’ செய்யப்பட்ட பல்லி இருந்ததைப் பார்த்தார்.6 மாத கர்பிணியான பிரியங்கா, சாப்பிடும் உணவில் வறுக்கப்பட்ட பல்லி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடை மேலாளரிடம் தகவல் தெரிவித்தார்.

ஆனால், அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை.இதையடுத்து பிரியங்கா பல்லியை புகைப்படம் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும், குழந்தைகளும், 6 மாத கர்ப்பிணியான தாமும் பல்லி விழுந்த உணவை கவனிக்காமல் சாப்பிட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெக்டொனால்ட் நிறுவனம், தனது உணவு சுகாதாரத்தில் ஏற்கனவே பல முறை கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க