• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட பிரெஞ்ச் பிரைஸில் செத்த பல்லி

March 3, 2017 தண்டோரா குழு

கொல்கத்தாவில் உள்ள மெக்டோனால்ட்ஸ் உணவகத்தில் பிரெஞ்ச் பிரைஸில் பொறிக்கப்பட்ட நிலையில் பல்லி ஒன்றும் சேர்ந்து பரிமாறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா மோயித்ரா எனும் கர்ப்பிணி தமது மகளுடன் மெக் டோனால்ட்ஸ் உணவகம் சென்றுள்ளார். அங்கு தனது குழந்தைக்கு பிரெஞ்ச் பிரைஸ் வாங்கிக் கொடுத்தார். அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை, அதனுள், நன்கு ‘ஃப்ரை’ செய்யப்பட்ட பல்லி இருந்ததைப் பார்த்தார்.6 மாத கர்பிணியான பிரியங்கா, சாப்பிடும் உணவில் வறுக்கப்பட்ட பல்லி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடை மேலாளரிடம் தகவல் தெரிவித்தார்.

ஆனால், அதற்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை.இதையடுத்து பிரியங்கா பல்லியை புகைப்படம் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும், குழந்தைகளும், 6 மாத கர்ப்பிணியான தாமும் பல்லி விழுந்த உணவை கவனிக்காமல் சாப்பிட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெக்டொனால்ட் நிறுவனம், தனது உணவு சுகாதாரத்தில் ஏற்கனவே பல முறை கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க