• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தொழில் முனைவோர்கள் ஆர்ப்பாட்டம்

December 15, 2020 தண்டோரா குழு

மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வெட் கிரைண்டர்,மோட்டர் பம்புகளுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.தங்கம் விலை போல உயரும் மூலப்பொருட்கள் விலை உயர்வினால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், மூலப்பொருட்கள் இறக்குமதி மீதான வரிகளை குறைக்க வேண்டும் எனவும் கூறிய அவர்கள், விலை உயர்வை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். குறுந்தொழில் முனைவோருக்கு தனிக்கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும், கோவையில் மூடப்பட்டுள்ள மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கான செயில் கிடங்கை திறக்க வேண்டும் எனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க