தமிழக மீனவர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தகவல்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்டாவில் “இந்திய பெருங்கடல் ரிம் கழகத்தின்”( IORA) மூன்று நாள் மாநாடு மார்ச் 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கலந்து கொண்டார். அதே போல் இந்த மாநாட்டில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் கலந்து கொண்டார்.
இதனிடையே மாநாட்டின் இறுதி நாள் முடிவில் ஹமீத் அன்சாரி சிறிசேனவை சந்தித்து தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பேசி உள்ளார் எனக் கூறப்படுகிறது.
“இலங்கை கடற்படை சார்பில் அப்படி எந்த தாக்குதலும் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படவில்லை. எனினும் இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்” என்று சிறிசேனா, அன்சாரியிடம் தெரிவித்துள்ளார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்