• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முள்புதரில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் சிசு – ஆத்துப்பாலம் மயானத்தில் நல்லடக்கம்

June 30, 2020 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் அருகே சடலமாக மீட்கப்பட்ட 7 மாத ஆண் சிசுவை,போத்தனூர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் மற்றும் தன்னார்வர்கள் ஆத்துப்பாலம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

கோவை வெள்ளளூர் பகுதியிலுள்ள குடிசைமாற்றுவாரிய குடியிருப்புக்கு பின்பகுதியில் இறந்த நிலையில் ஆண்குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து போத்தனூர் காவல் நிலைய தலைமை பெண் தலைமை காவலர் மற்றும் அறக்கட்டளையினர் ஆத்துப்பாலம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.இதில் பெண் தலைமை காவலரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும் படிக்க