January 14, 2020
துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயூடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுகொண்டார்.
இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்
சோ ஒரு ஜீனியஸ், ஜீனியஸ் என்பதை அடையாளப்படுத்த சில ஆண்டுகளாகும். தான் ஜீனியஸ் என்பதை நிரூபிக்க சோ எடுத்த துறை பத்திரிகை துறையாகும். அவரது ஆயுதம் துக்ளக். முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம், சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை. சோவை பெரிய ஆளாக்கியது பக்தவத்சலம், கலைஞர் ஆகிய இருவர் தான். எமர்ஜென்சியை எதிர்த்ததால் தேசிய அளவில் அறியப்பட்டார் சோ. சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி.
கவலைகள் அன்றாடம் வரும்; அதை நிரந்திரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான். கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி, தற்காலிகமாக்கிக் கொண்டால் அறிவாளி. பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது. பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.