June 11, 2018
தண்டோரா குழு
நாட்டின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 10-வது பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். தற்போது, உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி டெல்லி கிருஷ்ணா மார்க் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,இது வழக்கமான சோதனை தான் என்றும், வாஜ்பாயின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.