• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் நடப்பட்டது

October 15, 2022 தண்டோரா குழு

முன்னால் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை செட்டிபாளையம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி,இயற்கை பவுண்டேஷன், கலாம் மக்கள் அறக்கட்டளை, ஆர்.ஆர்.மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,35 ஏக்கர் நிலத்தில் சுமார் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு சமுதாய நல பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கோவை செட்டிபாளையம் பகுதியில் சுமார் 35 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி, இயற்கை பவுண்டேஷன்,கலாம் மக்கள் அறக்கட்டளை, ஆர்.ஆர்.மருத்துவமனை,நேரு நகர் லயன்ஸ் சங்கம், பைரா ஆகியோர் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினர்களாக பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி,மாவட்ட ஆளுநர் ராம்குமார், ஜி.எல்.டி. ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர்,சுற்றுச்சூழல் மாவட்ட தலைவர் சம்பத், ஆர்.ஆர். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரவிந்திரன்,கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர்,லயன்ஸ் மாவட்ட பி.ஆர்.ஓ. மற்றும் வட்டார தலைவர் செந்தில் குமார் ,இயற்கை பவுண்டேஷன் நிறுவனர் வினோத் ராஜா,மற்றும் நேரு நகர் லயன்ஸ் செயலாளர்கள் லோகநாதன்,மோகன் ராஜ்,கல்லூரி பேராசிரியர் ஞானசேகரன், ராமலிங்கம் தனுஷ்
அக்னி சிறகு ராகவன் சூர்யா சூர்யா
ராபர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இரத்தினம் கல்லூரி மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க