• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தராமலிங்க தேவர் உருவபடத்தை கிழிப்பு – முக்குலத்தோர் புலிப்படையினர் ஆர்ப்பாட்டம்

December 12, 2020 தண்டோரா குழு

கோவை இராமநாதபுரம் ஒலமப்ஸ் 80 அடி சாலை பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பசும்பொன் முத்தராமலிங்க தேவர் உருப படம் வைக்கபட்டது. தேவர் ஜெயந்தி அன்று மேடைகள் அமைக்கபட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு கோவில் பூசாரி வழக்கமான பணிகளை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் கோவில் நடையை சாத்திவிட்டு வீட்டிற்க்கு சென்றுள்ளார். இன்று காலை அவரது மனைவி கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய வந்தபோது வளாகத்தின் உள்ளே வைக்கபட்டு இருந்த முத்தராம்லிங்க தேவரின் உருவ படம் கிழிக்கபட்டு இருந்ததை கண்டு அதிரிச்சி ய்டைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே தெரிய வர ஏராளமான பொதுமக்களும் தேவர் அமைப்பை சேர்ந்தவர்களும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தேவர் உருவபடத்தை கிழித்தவர்கள் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோவை மாவட்ட இளைஞர் அணி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க