• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல் முறையாக உடல் உறுப்பு தானம் மூலம் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை – கோவை அரசு மருத்துவமனை சாதனை !

February 27, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மற்றொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது. இந்த நிலையில், தானமாக சிறுநீரகத்தை வெற்றிகராம மற்றொருவருக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரது மகன் சிவ பெருமாள் (35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி சிவ பெருமாள் தனது வீட்டின் அருகில் உள்ள சமுதாய கூட்டத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், சிவ பெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சிவ பெருமாளின் குடும்பத்தினர் முன்வரவே கடந்த 5ம் தேதி முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் பெறப்பட்டது. பல தனியார் மருத்துவமனைகள் உடல் உறுப்பு தானம் பெற்று வந்தாலும், அரசு மருத்துவமனையில் முதன் முறையாக உடல் உறுப்பு தானம் பெறப்படுவதால், மருத்துவர்கள் ஒருவித பதட்டத்துட்டன் இருந்தனர். இருந்த போதிலும், எவ்வித பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக உடல் உறுப்பு தானம் பெற்று சாதனை படைத்தனர்.இந்த சூழலில், மேலும், ஒரு சாதனையாக எவ்வித இடையூறும் இல்லாமல் தானமாக பெறப்பட்ட சிறுநீரகத்தை முதல் முறையாக மற்றொருவருக்கு பொருத்தியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,

“மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 34) என்பவர் கடந்த மே மாதம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் சிவபெருமானின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு அதனை அருண்குமார் வெற்றிகரமாக பொருத்தியுள்ளோம். கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வந்தபோதிலும் முதன்முறையாக தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மற்றொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ கண்காணிப்பாளர் சடகோபன் ஒருங்கிணைப்பில் மருத்துவர்கள் பிரபாகர், காந்தி மோகன், தினகரன் பாபு, மோகன், ரமேஷ், சாந்தா அருள்மொழி, ஜெயசங்கர் நாராயணன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இடையூறுகளை களைந்து சிறப்பாக செயல்பட்டு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

உடல் உறுப்பு தானங்கள் அதிக அளவில் புறப்படும் பொழுது பல குடும்பங்களுக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்கிறது இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

மேலும் படிக்க