• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலீட்டுத் தொகை பெற ஆவணங்களை சமர்பிக்க அறிவுறுத்தல்

June 2, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் இயங்கி வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் கார்பரேசன்ஸ் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, தொகை திரும்ப பெறாமல் சுமார் 700 பேர் உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதலீட்டாளர்களுக்கு டான்பிட் சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில், முதலீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார், வாக்காளர் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல்பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோவை பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி.யிடம் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க