• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது- மு.க.ஸ்டாலின்

May 29, 2018 தண்டோரா குழு

முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது,மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.மாதவன்,ஜெ.குரு உள்ளிட்ட 7 பேரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி பிரச்சனை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க ஸ்டலின் கோரிக்கை வைத்து இருந்தார்.இந்த கோரிக்கையை விதி எண் 56–ன் கீழ் அவையை ஒத்திவைக்க வலியுறுத்தினார். அதற்கு தூத்துக்குடி பிரச்சனை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,

முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்கிற வார்த்தையே இல்லை.துப்பாக்கிச் சூடு என்கிற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன்?அமைச்சரவை கூட்டத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் அதற்கு பயனுண்டு.துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறினார்.மேலும், முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் தி.மு.க பங்கேற்காது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க