May 28, 2021
தண்டோரா குழு
முதலமைச்சர் கொரானா நிவாரணநிதிக்கு பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம் நிதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில்,கோவை மத்திய சிறையில் கொலை வழக்கு தொடர்பாக அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம், தனது PCP வழக்கு நிதியில் இருந்து 20,000 ரூபாயினை,முதலமைச்சர் கொரானா நிவாரணநிதிக்கு, கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் மூலம் வழங்கினார்.