• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முடிவின் தொடக்கம் ஆரம்பித்துவிட்டது! – மம்தா பானர்ஜி கருத்து

March 14, 2018 தண்டோரா குழு

உ.பி. இடைத்தேர்தல்  குறித்து முடிவின் தொடக்கம் ஆரம்பித்துவிட்டது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர்,புல்பூர்ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி,

“சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள மாயாவதி (பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்) மற்றும் அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்) ஆகியோருக்கு வாழ்த்துகள். முடிவின் தொடக்கம் ஆரம்பித்துவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க