• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீனவர்களுக்கு 5000 புதிய வீடுகள் – நிதியமைச்சர் தகவல்

March 16, 2017 தண்டோரா குழு

மீனவர்களுக்கு ரூ.85 கோடி செலவில் 5000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதியமைச்சர் டி ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் வியாழனன்று தாக்கலான நிதிநிலை அறிக்கையில்,

“நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 3000 லிட்டரிலிருந்து 3400 லிட்டராக டீசல் வழங்கப்படும். எண்ணூர், காசிமேடு உட்பட 7 மீன்பிடி துறைமுகங்கள் ரூ.1105 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இயந்திர மீன்பிடி படகுகளுக்கான டீசல் 15,000 லிருந்து 18,000 லிட்டராக உயர்த்தப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். மீனவர்களுக்கான நிவாரண உதவித்தொகை ரூபாய் 4,500 ஆக உயர்த்தப்படும். மீனவர்களுக்கு ரூ.85 கோடி செலவில் 5000 வீடுகள் கட்டித்தரப்படும்”

இவ்வாறு நிதியமைச்சர் டி ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க