• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம்

February 24, 2017 தண்டோரா குழு

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க ரூ.15 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம் எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்புறக் கடல் பரப்பில் பெரும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு மீன்வளம் குறைந்ததோடு, அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் ரூ.75 லட்சம் மதிப்பில் எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் மீன்சந்தைகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க