நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கும் மீட்டர் ஆட்டோ கட்டணத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என கோவையில் ஏ.பி.ஜே.ஆட்டோ சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏ.பி.ஜே மீட்டர் ஆட்டோ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
மகளிர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிரை கவுரவிக்கும் விதமாக சிறப்பு விருந்தினராக பெண் வழக்கறிஞர் தேஜஸ்வினி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில்,
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆட்டோ ஓட்டுனர்கள் போதிய வருமானமின்றி தவிப்பதாகவும், எனவே ஆட்டோ ஓட்டுனர்களின் நலன் கருதி, நீண்ட காலமாக உயர்த்தாமல் இருக்கும் மீட்டர் ஆட்டோ கட்டணத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்ச்சியில், ஏபிஜே மீட்டர் ஆட்டோ நிர்வாகிகள் சேவியர்,ராம் விஷாந்த்,பத்மநாபன்,பிரதீப், கோவை பாபு,ஒண்டிப்புதூர் மணிகண்டன், அருண் கௌரி ,அருண் பிரபு ,சாமி ராஜ் பாபா, பிஎன் புதூர் சதீஷ்குமார் ,எஸ் எஸ் கணேசன், ஹெல்பிங் குமார், துளசி ,அசார் முனீர் ,துடியலூர் ஆனந்த் ,ரஞ்சித் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்