• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிஸ் கூவாகமாக திருநங்கை ஆண்ட்ரியா தேர்வு செய்யப்பட்டார்

May 9, 2017 தண்டோரா குழு

விழுப்புரம் கூவாகத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை ஆண்ட்ரியா அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் கோலாகலமாக வருடா வருடம் திருநங்கைகளுக்கு மிஸ் கூவாகம் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர்.

மிஸ் கூவாகம் போட்டியை காண பொதுமக்கள் அதிக அளவு திரண்டனர் . இதனால் அப்பகுதியே திருவிழா போல் கோலாகலம் பூண்டது. திருநங்கைகள் அலங்காரத்துடன் மேடையில் கேட் வாக் செய்தனர் . சுமார் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த ஆண்ட்ரியா முதல் பரிசைப் பெற்றார். இவர் ஆடை வடிவமைப்பு கல்வி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக சேலத்தை சார்ந்த கவி , மூன்றாவதாக மதுரையை சேர்ந்த வருணிதாவும் வெற்றி பெற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற திருநங்கைகள் “திரைப்படங்களில் திருநங்கை வேடங்களில் திருநங்கைகள் மட்டுமே நடிக்க வேண்டும், திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் .

மேலும் படிக்க