September 13, 2017
தண்டோரா குழு
மும்பையில் மிஷின் 24 என்னும் புதிய திட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று(செப் 13)தொடங்கி வைத்தார்.
மும்பையின் “Brihanmumbai municipal Corporation” நிறுவனம், இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவங்களுடன் இணைந்து மிஷன் 24 என்னும் புதிய திட்டத்தை உருவாக்கினர்.
இத்திட்டத்தின் கீழ், மும்பையில் உள்ள சிவாஜி நகர், தியோனர் மற்றும் மான்கர்த் பகுதியைச் சேர்ந்த சேரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.மேலும்,பள்ளிகள், கல்லூரிகள், மகப்பேறு மருத்துவமனை, சுகாதார மையங்கள், மருந்தகங்கள் ஆகியவையை ஏற்படுத்தி தருவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இதுக்குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,
“மும்பையிலுள்ள சேரி பகுதிகள் வளர்ச்சி அடையாமல், மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தற்போது புதிதாக தொடங்கியிருக்கும் மிஷன் 24 திட்டம் மூலம் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்”
இவ்வாறு அவர் கூறினார்.