• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்வாரியத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நேர்காணல் ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கிறது

July 23, 2021 தண்டோரா குழு

கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்தில், ஐ.டி.ஐ. கல்வி பயின்றவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் ஆகஸ்ட் 4 ம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்திற்கு உள்பட்ட அலுவலகங்களில் ஒரு வருட கால ஐ.டி.ஐ., தொழிற் பழகுநர் பயிற்சிக்கு 70 ஒயர்மேன், எலெக்ட்ரீசியன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்படி, நேர்காணல் நடத்துவதற்காக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து 350 ஐ.டி.ஐ., ஒயர்மென், எலக்ட்ரீசியன் கல்வி பயின்றவர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

அப்பட்டியலில் உள்ள அனைவருக்கும் நேர்காணல் கடிதங்கள் அனுப்பப்பட்டு, அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, கோவை டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் நடக்கிறது.

இதில் பங்கேற்க வருவோர், கல்வி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அட்டை, மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தொழில் பயிற்சியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மேற்கொண்டவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க