ஆர்.கே.நகரில் பிரச்சாரத்தின் போது தேசியக் கொடியை அவமதித்த வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவிருந்த சூழ்நிலையில் கடந்த 6-ம் தேதி, அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா (ஒ.பி.எஸ் அணி)அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, ஆர்.கே.நகரில் முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஜெயலலிதாவின் சடலம், சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருப்பது போன்ற பொம்மையை வைத்து அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சவப்பெட்டி பொம்மை மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது போல அது வடிவமைக்கப்பட்டிருந்தது.
இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் மா.பா. பாண்டியரஜானை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் பாண்டியராஜன் இறங்கியுள்ளதாகவும் அக்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்