• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கத்தியுடன் வந்தவரால் பரபரப்பு

July 17, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஒருவர் காய்கறி வெட்டும் கத்தியை புதிதாக வாங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் அமைப்பினர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகம் வருவோர் போலீசார் சோதனைக்கு பின்பே அனுப்பப்பட்டனர். அப்படி சோதனை செய்யும் போது ஒருவர் காய்கறி வெட்டும் கத்தியை புதிதாக வாங்கி தனது பையில் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரிக்கையில் டவுன்ஹால் பகுதியில் வீட்டு தேவைக்காக புதிதாக காய்கறி வெட்டும் கத்தியை வாங்கியுள்ளதாகவும், மனு அளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறினார்.

போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பெற்றுக்கொண்டு பின்னர் மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க