• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து விஷால் அறிவிப்பு

March 10, 2018 தண்டோரா குழு

மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டியும் திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 1-ம் தேதி முதல் எந்த புதுப்படத்தையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறது. திரையரங்குகள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளது.  வேலை நிறுத்தம் குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,

”தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக்கின் படி கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடத்தி வருகிறது. இதன் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கியூப் மற்றும் மற்ற பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படாததால் வருகிற மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து வருகிற 16-ம் தேதி முதல் அனைத்து படங்களின் படப்பிடிப்பும்  ரத்து செய்யப்படுகிறது.

மேலும் படிக்க