• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மருமகன் – சூலூரில் பயங்கரம்

February 15, 2022 தண்டோரா குழு

சூலூரில் காதல் மனைவி கர்ப்பமானதில் சந்தேகமடைந்த மருமகன் மாமியாரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் கண்ணம்பளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால், கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி செல்வி மற்றும் மகள் காயத்திரி (22) ஆகியோருடன் வசித்து வருகிறார்.கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்வி அதே பகுதியைச் சேர்ந்த லாண்டரி கடை வைத்து நடத்தி வரும் ராமசாமி என்பவரது மகன் ஜீவானந்தம் (21), என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில்,காயத்திரி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.காதல் மனைவியின் கர்பத்தில் சந்தேகமடைந்த ஜீவானந்தம் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இதனால்,காயத்திரி தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்,இன்று அதிகாலை 3 மணியளவில் மனைவி காயத்திரி வீட்டிற்குசென்ற ஜீவானந்தம் தகராறு செய்துள்ளார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய மாமியார் செல்வி, விடிந்த பின் வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என
கூறியுள்ளார்.

இதைக் கேட்காத ஜீவானந்தம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமியார் செல்வியை தலை, முகம் மற்றும் கைகளில் சரமாறியாக வெட்டியுள்ளார்.இதில்செல்வியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, ரத்தவெள்ளத்தில் செல்வி கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் மறைந்திருந்த ஜீவானந்தத்தை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சொந்த மாமியாரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க