• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

மானிய தொகையை ஒரே தவணையாக வழங்க உத்தரவு – தமிழக முதல்வருக்கு நன்றி

June 9, 2021 தண்டோரா குழு

மானிய தொகையை ஒரே தவணையாக இம்மாத இறுதிக்குள் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு குறுந்தொழில் முனைவோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாக்ட் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:

தமிழகத்தில் ரூ.25 லட்சத்துக்கு கீழ் உற்பத்தி திறன் கொண்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயந்திரம் வாங்கும் தொகையில் 25 சதவீத மானியம் இதுநாள் வரை 3 ஆண்டுகளில் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. வங்கியில் கடன் கிடைக்க வாய்ப்பில்லாத குறுந்தொழில் முனைவோர், தங்கள் கையில் உள்ள பணத்தை கொண்டும், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றும் இயந்திரங்களை வாங்குவது வழக்கம்.

இதில், மானியத் தொகையை பிரித்து வழங்கி வந்ததால் குறுந்தொழில் நிறுவனத்தினர் கடன்களை திருப்பி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.இதனால் வழங்கப்படும் மானியத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். எங்களது கோரிக்கையை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.

மானிய தொகையை ஒரே தவணையாக வழங்கவும், அதுவும் இம்மாத இறுதிக்குள் மானியத் தொகையை குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக கோவை தொழில் துறையினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க