• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மானிய தொகையை ஒரே தவணையாக வழங்க உத்தரவு – தமிழக முதல்வருக்கு நன்றி

June 9, 2021 தண்டோரா குழு

மானிய தொகையை ஒரே தவணையாக இம்மாத இறுதிக்குள் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு குறுந்தொழில் முனைவோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாக்ட் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:

தமிழகத்தில் ரூ.25 லட்சத்துக்கு கீழ் உற்பத்தி திறன் கொண்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயந்திரம் வாங்கும் தொகையில் 25 சதவீத மானியம் இதுநாள் வரை 3 ஆண்டுகளில் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. வங்கியில் கடன் கிடைக்க வாய்ப்பில்லாத குறுந்தொழில் முனைவோர், தங்கள் கையில் உள்ள பணத்தை கொண்டும், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றும் இயந்திரங்களை வாங்குவது வழக்கம்.

இதில், மானியத் தொகையை பிரித்து வழங்கி வந்ததால் குறுந்தொழில் நிறுவனத்தினர் கடன்களை திருப்பி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.இதனால் வழங்கப்படும் மானியத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். எங்களது கோரிக்கையை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.

மானிய தொகையை ஒரே தவணையாக வழங்கவும், அதுவும் இம்மாத இறுதிக்குள் மானியத் தொகையை குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக கோவை தொழில் துறையினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க