• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி பகுதிகளில் 9,200 நீளம் அளவுக்கு சாலை சீரமைக்கப்பட்டுள்ளது – மாநகராட்சி கமிஷனர்

November 15, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் சூயஸ் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய்கள் அமைத்த பிறகு, குழாய் பதித்த இடங்களில் சாலை சீரமைத்தல் மற்றும் வெட்மிக்ஸ் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாரமேடு மெயின் ரோடு, மணியகாரன்பாளையம், ராகாச்சி கார்டன் மெயின் ரோடு, தில்லை நகர், குறிஞ்சி கார்டன், பி.ஆர்.பி. கார்டன், பாலசுந்தரம் பிரதான சாலை, எம்.ஜி.ரோடு, பாரதி நகர், ஜே.கே.கார்டன், ரோஸ் கார்டன், ஏ.கே.எஸ்.நகர், பொன்னையராஜபுரம் மெயின் ரோடு, கோபால் லே-அவுட், சொக்கம்புதூர் மெயின் ரோடு போன்ற பல்வேறு இடங்களில் கடந்த 6ம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் மூலம் சுமார் 9,200 நீளம் அளவுக்கு சாலை சீரமைத்தல் மற்றும் வெட்மிக்ஸ் சாலை போடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறுகையில்,

‘‘இப்பணிகளை விரைவாக மேற்கொள்ள 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஜே.சி.பி. உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் மூலம் சாலை சீரமைத்தல் பணி விரைவாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.

மேலும் படிக்க