• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி சார்பில் கடைகள், நிறுவனங்களிடம் இருந்து நிலுவை தொகை ரூ.13.5 கோடி வசூல்

October 12, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து நிலுவை தொகையில் இருந்து ரூ.13.50 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்கு பல்வேறு நிறுவனங்கள், கடைகள் வணிக வளாகங்கள் வைத்துள்ள நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி 2 தனியார் செல்போன் நிறுவனங்கள் கண்ணாடி இழை கேபிள் அமைத்தற்கான தட வாடகை கட்டணம் ரூ.10 கோடியே 73 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து நீண்டகாலமாக மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் இருந்தவர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட தியாகிகுமரன் மார்க்கெட் கடைகள், தொட்டராயன் கோவில் வீதி கடைகள், பட்டேல் ரோடு கடைகள், அவினாசி ரோடு வணிக வளாக கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் இருந்து வாடகையாக கடந்த 20 நாட்களில் ரூ.2 கோடியே 77 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது.மேலும் தொடர்ந்து நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். இதுவரை நிலுவை தொகை ரூ.13 கோடியே 50 லட்சம் வசூலாகி உள்ளது.

இதுதவிர மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு வாடகை ரூ.1 கோடியே 7 லட்சத்தை செலுத்த கோரி உணவு பொருள் வழங்கல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட துறை ரூ.34 லட்சம் வழங்ககோரி அதன் இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க