• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சி கமிஷனர் அதிரடி ஆய்வு முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவு

January 9, 2021 தண்டோரா குழு

கோவை மத்தியம் மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள சித்தாபுதூர், சின்னசாமி ரோடு, தனலட்சுமி நகர், ஆவாரம்பாளையம், நவஇந்தியா ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சித்தாபுதூர் அருகே முககவசம் அணியாத தனியார் கடை ஊழியர்கள் 5 நபர்களுக்கு தலா 200 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தார்.தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் தனியார் கடை வியாபாரிகளிடம் மாநகராட்சி கமிஷனர் கூறுகையில்,

‘‘குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது.அதற்கான குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். சாலையோரங்களில் இருக்கும் தேவையற்ற பொருட்கள், பழுதடைந்த வாகனங்களை உடனடியாக அகற்றிட வேண்டும்,’’என்றார்.

இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், மண்டல உதவி கமிஷனர்கள் மகேஷ்கனகராஜ் (மத்தியம்), செந்தில்குமார் ரத்தினம் (வடக்கு), செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பார்வதி (குடிநீர் திட்டம்) மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க