• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சியில் வீடு, வீடாக ஆய்வு தினமும் மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு

May 29, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தொடர்பான ஆய்வினை தினமும் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்திலே கொரோனா நோய் தொற்று பாதிப்பு கோவையில் அதிகம் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையை காட்டிலும் நோய் தொற்று பரவல் கோவையில் அதிகரித்துள்ளது. கோவையில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வினை தினமும் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்ட்ர உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் நாகராஜன் கூறியதாவது:

கோவையில் நோய் தொற்று பாதிப்பை விரைந்து கண்டறியும் விதமாக மாநகராட்சியில் 1,500 பேர் நியமிக்கப்பட்டு 3 நாள்களுக்கு ஒருமுறை ஆய்வு வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வினை தினம்தோறும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வந்த சளி மாதிரிகள் அரசு ஆய்வகங்களில் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இதனால் முடிவுகள் கிடைக்க 2 முதல் 3 நாள்கள் வரை ஆனது. இந்நிலையில் சுகாதார துறை சார்பில் எடுக்கப்படும் சளி மாதிரிகள் தனியார் ஆய்வகங்களுக்கும் அனுப்பி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 24 மணி நேரத்தில் முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க