• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைக்களுக்கு பூட்டு

January 22, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும்,மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள வணிக வளாகங்களில் கட்டப்பட்டுள்ள கடைகள் , தனியாருக்கு மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், நீண்ட மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கடந்த வாரங்களில் 6 மாதங்களுக்கு மேல் வாடகை நிலுவை வைத்துள்ள 15 கடைகளுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டில் 7 காய்கறிக் கடைகள் மற்றும் கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியில் 2 கறிக்கடைகள் என 9 கடைகள், 6 மாதங்களுக்கு மேலாக மாநகராட்சிக்கு வாடைகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியணின் உத்தரவுப்படி, மேற்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில் அரசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் மேனகா குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் வாடகை செலுத்தாத 9 கடைகளையும் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க