July 27, 2025
தண்டோரா குழு
கோயம்புத்தூரில் கல்லூரி மாணவிகளுக்கான தனித்துவமான தொழில்முனைவு தயாரிப்பு திட்டமான ‘நிபுணி கரியர் பாத்திங்’ நிகழ்ச்சியை அவ்தார் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முயற்சி, 2030க்குள் இந்தியாவெங்கிலும் உள்ள 10,000 கல்லூரி மாணவிகளுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாகும்.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான அவ்தார் குழுமம், கல்லூரிகளில் பயிலும் இளம்பெண்கள் தங்கள் உயர் கல்விக்குப் பின் தொழில் வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரு தனித்துவமான முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அவ்தார் குழுமத்தின் அங்கமாக செயல்படும் அவ்தார் ஹ்யூமன் கேப்பிடல் டிரஸ்ட் (AHCT) மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதில், நிபுணி கரியர் பாத்திங், எனப்படும் இந்த திட்டம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பெங்களூருவில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்காக நடத்தப்படும் புதிரி திட்டத்தில் பங்கேற்கும் மாணவிகளுக்கான 13வது உத்யோக உற்சவத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில், நிபுணி கரியர் பாத்திங் நிகழ்வு கல்லூரி மாணவிகளுக்கான தொழில்முனைவு தயாரிப்பு திட்டமாக, திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா கோவை நவ இந்திய பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கோயம்புத்தூர் பாஷ் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் செல்வராணி மைல்சாமி குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், கோயம்புத்தூரின் 10 அரசு பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயலாளர் டி. கே. ஆர். சரஸ்வதி கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஏ. பொன்னுசாமி தலைமை தாங்கினர்.
அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட்
நிர்வாக அறங்காவலரும், அவதார் குழுமத்தின் நிறுவனர் தலைவருமான டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ், கூறுகையில், “தொழில் நோக்கம் என்பது ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது பற்றியது அல்ல. அவதாரில், சிந்தனைத் தலைமை தாக்கமாக மாற வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இளம் பெண்கள் சரியான சுற்றுச்சூழல் அமைப்பை அணுகும்போது அர்த்தமுள்ள தொழில்களைத் தொடர ஆழ்ந்த உந்துதல் பெறுகிறார்கள். அதில் நிபுணி கரியர் பாத்திங் நிகழ்வு அடுத்த பயணத்தில் தொடர்கிறோம்.
இத்திட்டம் அவர்களுக்கு தகவல் தொடர்பு, தலைமைத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றில் முக்கியமான திறன்களை வழங்கும். தமிழ்நாட்டில் 10 முன்னோடித் திட்டங்களைத் தொடங்கி, அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 கல்லூரி செல்லும் பெண்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர்
டி. கே. ஆர். சரஸ்வதி, கூறுகையில், பெண் மாணவர்கள் பல்வேறு தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கான சிறந்த தளத்தை உருவாக்குகிறது. இது லட்சியம் விழிப்புணர்வை சந்திக்கும் இடமாகவும் உள்ளது. முதல் தலைமுறை கற்பவர்கள் என பல மாணவர்களுக்கு, உத்யோக் உத்சவ், தொழில் நோக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் தொழில்முறை எதிர்காலத்தை ஒன்றிணைந்து செயல்படுத்த இம்மாநாடு உதவுகிறது. என்று கூறினார்.
அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட்
AHCT அமைப்பு 2024-25 கல்வியாண்டில் மட்டும் ₹78 லட்சம் வரை கல்வி உதவித்தொகைகளை வழங்கியுள்ளது. குறிப்பிடத்தக்கது.