• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் அரசியலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும் – கமல்ஹாஸன்

March 27, 2018 தண்டோரா குழு

மாணவர்கள் அரசியலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவள்ளூரில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசுகையில்,

“கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லவிடாமல் என்னை தடுக்க பல தடைகள் வருகிறது.படிப்பை முடித்து வந்தவுடன் உங்களை தாக்கப்போவது அரசியலும், ஊழலும் தான்.மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.அரசியலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும்,நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது.நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்யவேண்டியதை நீங்களும் செய்யும் நேரம் வந்துவிட்டது”. என்று கூறினார்.

மேலும் படிக்க