• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாடு அறுவை நிலையத்தில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிப்பதாக புகார்

April 25, 2022 தண்டோரா குழு

மாடு அறுவை நிலையத்தில் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிக்கும் ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி,கோவை மாநகர் மாவட்ட மாட்டு இறைச்சி வியாபரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகர் மாவட்ட மாட்டு இறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் அதன் தலைவர் நிம்மதி இஸ்மாயில் தலைமையில், கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.அதில்,கோவை சத்தி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட மாடு அறுவை நிலையத்தில்,மாடு அறுவை கட்டணமாக மாடு ஒன்றுக்கு ரூ.10 என மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த காலங்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள மாடு அறுவை கட்டணமாக ரூ.10 – க்கு பதிலாக சிறிய காளை ஒன்றுக்கு ரூ .70 மற்றும் பெரிய காளை ஒன்றுக்கு ரூ.250 /-வசூல் செய்து அரசாங்கத்திற்கும் எங்களுக்கும் பெரிய அளவு இழப்பை ஏற்படுத்தி வந்தார்.இந்நிலையில் கடந்த 24.03.2022 அன்று நடைபெற்ற ஏலத்தில் அரசு நிர்ணயம் செய்த தொகையான ( 17,50,000) பதினெழு லட்சத்திற்கு மேல மிக அதிகமான தொகையான 1,01,00,000 / ஒரு கோடியே ஒரு லட்சத்திற்கு ஒப்பந்தபுள்ளியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மேற்படி மாடு அறுவை நிலையத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அரசு நிர்ணயம் செய்த ஏலத் தொகையை விட 6 மடங்கு அதிகமான தொகைக்கு எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.நான் மிக அதிக தொகைக்கு ஏலத்தை எடுத்துள்ளதால் அரசு நிர்ணயம் செய்துள்ள மாடு அறுவை கட்டணமான ரூ .10 க்கு பதிலாக சிறய காளைகளுக்கு 150 / – பெரிய காளைகளுக்கு ரூ.500 / – கட்டணமாக எங்களை கட்டாயபடுத்தி வசூல் செய்து எங்களிடம் இருந்து கட்டணக்கொள்ளை அடித்து வருகிறார்

மேற்படி அதிகமான கட்டணத் தொகையை நாங்கள் கட்ட மறுத்த போது மாடு அறுவை நிலையத்தை எங்களது, மாடுகளை அறுக்க விடாமல் பூட்டி வைத்து விட்டு எங்களை மிரட்டி கட்டாய வசூல் செய்து வருகிறார் . இது போக நாங்கள் மாடு அறுவை நிலையத்தில் கட்டணம் கட்டி மாடுகளை அறுத்து சிறிய வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்த பிறகு அந்த சிறிய வியாபாரிகளையம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்.இதனால் நாங்கள் மிகுந்த பெருத்த நஷ்டத்துக்கும் கஷ்டத்துக்கும் உள்ளாகி மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம்.

எனவே மாடு அறுவைக்காக அதிக கட்டணம் வசூல் செய்து வரும் ஒப்பந்ததாரர் அஸ்கர் அலி மீது சட்டபடி நடவடிக்கை எடுத்து,அவரது ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து மேற்படி மாடு அறுவை நிலையத்தினை அரசாங்கமே எடுத்து நடத்தி நியாயமான அறுவை கட்டணம் வசூல் செய்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க