• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாடு அறுவைமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டம்

April 30, 2022 தண்டோரா குழு

கோவை சத்தி ரோடு மற்றும் செட்டிபாளையம் மெயின் ரோட்டில் மாநகராட்சிக்கு சார்பில் மாடு அறுவை மனைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மனையை ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் எடுத்தவர்கள் அரசு நிர்ணயம் செய்த மாடு அறுவை கட்டணம் ரூ.10 வசூலிக்காமல், சத்தி ரோட்டில் உள்ள அறுவை மனையில் சிறிய காளைக்கு ரூ.150ம், பெரிய காளைக்கு ரூ.500ம் வசூல் செய்கின்றனர்.

செட்டிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அறுவை மனையில் சிறிய காளைக்கு ரூ. 150ம், பெரிய காளைக்கு ரூ.300ம் வசூலிக்கிறார்கள் என மாட்டிறைச்சி வியாபாரிகள் அன்மையில் கலெக்டர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் இந்த அறுவை மனைகளை அரசே எடுத்து நடத்தி அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் மாடு அறுவைமனைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக மாடு அறுவை மணைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

மேலும் படிக்க