March 2, 2019
மஹா போஸ்டர் சர்ச்சையில் ஹன்சிகா மீது எடுத்த நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் நடிகை ஹன்சிகா மீதும் இயக்குனர் ஜமில் மீதும் புகார் அளித்திருந்தார்.
இதற்கிடையில், புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? – 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.