• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மஹா போஸ்டர் சர்ச்சை: ஹன்சிகா மீது எடுத்த நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி

March 2, 2019

மஹா போஸ்டர் சர்ச்சையில் ஹன்சிகா மீது எடுத்த நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் நடிகை ஹன்சிகா மீதும் இயக்குனர் ஜமில் மீதும் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில், புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? – 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க