November 1, 2019 தண்டோரா குழு
மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் அனைத்து மலை கிராமங்களிலும் நக்சல் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதி காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல் குத்தி பதி, சாடிவயல் பதி, வெள்ள பதி, சிங்கப் பதி, பொட்டப் பதி ஆகிய மலைக்கிராமங்களில் மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய நபர்கள் யாரேனும் வந்து உள்ளனரா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உடனடியாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.