April 10, 2020
தண்டோரா குழு
ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பாக ஐந்து மலைவாழ் கிராம மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கப்பட்டது.
கொரொனா எதிரொலி காரணமாக அனைத்து தொழிற்கூடங்களும் மூடப்பட்டன. தமிழக அரசும் ஊரடங்கு ஊத்திரவை ஏப்ரல் 14 ஆம் தேதி பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தினக்கூலிகளாக வயல்வெளிகளுக்கு செல்லும் மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பாக அதன் தலைமை ஆணையாளர் பிரசாத் உத்தமன் மற்றும் அதன் நிர்வாகிகள் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சர்க்கார் போரெத்தி, ஜாகீர் போரெத்தி,பச்சான் வயில், சவுக்குகாடு , புதுப்பதி ஆகிய மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் 600 க்கும் மேற்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி , காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.
கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து வட மாநிலத்தவர்கள் மற்றுக் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு ரூபாய் 6 லட்சம் செலவில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருவதாகவும், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஒரு லட்ச ரூபாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.