• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருந்தகத்தில் காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கி சாப்பிட்ட 6 பேருக்கு கொரோனா

July 15, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் மருந்தகத்தில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கியவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் தமிழக அளவில் கொரோனா தினசரி பாதிப்பில் கோவை தான் முதலிடத்தில் உள்ளது. 3 -வது அலைக்கு வாய்ப்பு உள்ள நிலையில், கோவை மாநகரில் கொரோனா தொற்று குறித்து தீவிர கண்காணிப்பில் மாநகராட்சி சுகாதார துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இதன்ஒரு பகுதியாக மாநகராட்சியில் உள்ள மருந்தகங்களில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரை வாங்குபவர்களின் விபரங்களை கோவை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.இவ்வாறு பெறப்படும் விபரங்களை வைத்து, அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி 36 -வது வார்டு பகுதியில் உள்ள மருந்தகங்களில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கி சாப்பிட்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா கள ஆய்வின் போது கண்டறிந்தார்.

இதையடுத்து மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் சளி,மாத்திரை வாங்கியவர்களின் விபரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மெடிக்கல் உரிமையாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,”

கோவை மாநகராட்சியில் தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 50 ஆக குறைந்து விட்டது. இருப்பினும் கொரோனா பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில்
மருந்தகங்களில் சளி,காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கி சாப்பிடுபவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதன்படி தினமும் அவர்களில் 100 பேர் முதல் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் 36 -வது வார்டு பகுதியில் மட்டும் 6 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து,
மருந்தகங்களில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரைகள் வாங்குபவர்களின் விபரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் டாக்டர்களின் பரிந்துரை இன்றி சளி, காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க