• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய எம்.பி.

January 4, 2017 தண்டோரா குழு

கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய சம்பவம் அம்மாநிலம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை (ஜனவரி 3) கூறியதாவது:

கர்நாடக பாஜக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே. அவரது தாயார் உடல்நலக் குறைவால் சிரசி என்னும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது அங்கு வந்திருந்த ஹெக்டே, தனது தாயாரை மருத்துவமனை ஊழியர்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்று கோபம் கொண்டு மருத்துவமனை ஊழியர்களையும், ஒரு செவிலியரையும் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் அம்மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. எனினும், சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க