• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருதமலை வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் 200 கிலோ அகற்றம்

January 12, 2022 தண்டோரா குழு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து கோவிலுக்கு செல்லும் சாலை 2 கி.மீ தூரம் உள்ளது. இச்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர், சரக பணியாளர்கள் 25 பேர் மற்றும் மருதமலை மலைவாழ் மக்கள் கிராமத்தை சார்ந்த துப்புரவு பணியாளர்கள் 10 பேர் கொண்ட குழுவினரால் சுத்தம் செய்யபட்டது. இதில் பிளாஸ்டிக் குப்பைகள் சுமார் 200 கிலோ அளவில் சேகரிக்கப்பட்டது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் கோவில் அருகே அமைந்துள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க