• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருதமலை முருகன் கோவிலின் ஓவியம் மீது கருப்பு மை வீச்சு- கோவையில் பரபரப்பு

April 1, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் சார்பாக மேம்பால தூண்கள், மேம்பாலத்திற்கின் கீழ் பகுதியில் உள்ள சுவர்களில், சங்க கால ஓவியங்கள்,புராண கதைகள் மற்றும் கோவையின் பெருமைகள் போன்றவைகள் ஓவியங்களாக வரையப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மரக்கடை மேம்பாலத்தில் கீழ் பகுதியில் உள்ள சுவரில் கோவையின் பெருமையான மருதமலை முருகன் கோவிலின் ஓவியம் வரைபட்டு இருந்தது. ஓவியம் மிகவும் அழகாக மக்களை கவரும் வண்ணம் இருந்தது. இதனிடையே இந்த ஓவியத்தின் மீது சில நபர்கள் கருப்பு மையை வீசி விட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்து அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதனிடையே இப்பகுதியில் உள்ள ஓவியத்தை கருப்பு மை பூசி அழித்தவர்கள் யார் என கோவை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க