• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன்சூர் அலிகானை விடுதலை செய்ய சிம்பு கோரிக்கை

April 21, 2018 தண்டோரா குழு

காவிரி போரட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யுமாறு நடிகர் சிம்பு காவல் ஆணையர் அலுவலகம் சென்று கோரிக்கை வைத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு சென்னையில் ராணுவ கண்காட்சி திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்.அப்போது அவரை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட டைரக்டர்கள், நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சென்ற நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர்அலிகானை விடுவிக்கக் கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் சிம்பு உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியது தவறு.அதில் எனக்கு உடன்பாடில்லை.மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.மேலும்,மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என்று கூறினார்.

மேலும் படிக்க