• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனிதக் கழிவை அகற்றும் ரோபோவை  இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய கேரள அரசுக்கு கமல் வாழ்த்து

February 28, 2018 தண்டோரா குழு

மனிதக் கழிவை அகற்றும் ரோபோவை, இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய கேரள அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாகசாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில்ரோபோவை ஈடுபடுத்தும் தொழில்நுட்பம்   கேரளாவில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். கழிவுநீர் பொங்கி வழியும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதன்முறையாக ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

“பண்டிகோட்” என பெயரிடப்பட்ட இந்த ரோபா, ஒரு மணி நேரத்தில் 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும். மாநில அரசின் நிதி உதவியோடு”ஜென் ரோபோட்டிக்ஸ்” என்ற நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. இந்த ரோபோபை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், இந்த ரோபோபை அறிமுகப்படுத்திய கேரள அரசுக்கு வாழ்த்து தெரிவித்து கமல் டுவீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும்ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க